ஆந்திரா மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் ஜங்கரெடிகுடெம் பகுதியைச் சேர்ந்தவர் ரோஹித். இவர் இரண்டு நாள்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்வதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்துள்ளது.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவலர் ராம்பாபுவை ரோஹித் அடித்ததால் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரோஹித் திடீரென அப்பகுதியில் உள்ள செல்போன் கோபுரம் ஒன்றின் மீது ஏறியுள்ளார். இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்குத் தகவல் அளித்தனர்.
சிறிது நேரத்தில் அப்பகுதி முழுவதும் பொதுமக்களும், காவல் துறையினரும் குவியத் தொடங்கினர். அப்போது பேசிய ரோஹித், தான் குற்றமற்றவர் என்றும், நான் நேசித்த பெண்ணையும், குடும்பத்தினரையும் அப்பகுதி அரசியல்வாதிதான் துன்புறுத்திவந்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.