தமிழ்நாடு

tamil nadu

இந்தியாவின் முதல் பிளாஸ்டிக் வங்கி!

By

Published : Sep 29, 2019, 3:09 PM IST

கௌஹாத்தி: ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவின் முதல் பிளாஸ்டிக் வங்கி அஸ்ஸாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

Plastic

காந்தியின் 150ஆவது பிறந்தநாள் வரும் அக்டோபர் இரண்டாம் தேதி கொண்டாடப்படவுள்ளது. காந்தியின் கனவான தூய்மை இந்தியாவை உருவாக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் என்ற பெயரில் தூய்மை இந்தியா திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு கழிவு மேலாண்மையை வலியுறுத்தியும், திறந்தவெளி கழிப்பிடமற்ற இந்தியாவை உருவாக்கவும் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில், பிளாஸ்டிக் கழிவுகளுக்கு எதிராக புதிய நடவடிக்கை ஒன்றை எடுக்க அரசு பரிசீலித்துவருவதாக பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் குறிப்பிட்டிருந்தார். ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வரும் அக்டோபர் இரண்டாம் தேதியுடன் தடை செய்யப்படலாம் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

பிரதமர் மோடியின் இந்த திட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் பிளாஸ்டிக் வங்கி ஒன்று அஸ்ஸாம் மாநிலம் ஹய்லாகன்டி பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை மக்கள் கொண்டுவந்து அளிக்கலாம். குப்பைகள் அருகே உள்ள தொழிற்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு மறுசுழற்சி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதி வணிகர்கள் பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள கடைக்கோடி பகுதியில் எடுக்கப்பட்டுள்ள முன்மாதிரி நடவடிக்கை பலராலும் பாராட்டப்படுகிறது.

இதையும் படிங்க: சூழலியல் பிரச்னைகளுக்கு பிளாஸ்டிக் தடை தீர்வா?

ABOUT THE AUTHOR

...view details