அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தருண் கோகாய் பாஜக, பிரதமர் நரேந்திர மோடி மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அஸ்ஸாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி அஸ்ஸாம் வருகைதந்திருந்தார்.
பிரதமரின் வருகை குறித்தும், பாஜகவின் செயல்பாடுகள் குறித்தும் தருண் கோகாய் பேசுகையில், "அஸ்ஸாம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு முந்தைய காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சியே முக்கியக் காரணம். ஆனால், பாஜக ஆட்சியில் பொருளாதாரம் பெரும் பாதிப்பைச் சந்தித்து மோசமான நிலையை எட்டியுள்ளது.