மத்தியப் பிரதேச மாநிலத்தில் அடர்ந்த காடுகள் நிறைந்த பான்சா கிராமத்தில் சூரிய ஒளி மின்சக்தி அடுப்பு மூலம் 74 வீடுகளில் தினமும் உணவு சமைத்து வருகின்றனர். இந்த யோசனையை முதலில் ஐஐடி மும்பை தெரிவித்திருந்தது. இதனை அறிந்த சமூக செயற்பாட்டாளர் மோகன் நாகர் மத்திய அரசிடம் இந்தத் திட்டத்தை தங்கள் கிராமத்திற்கு வழங்குமாறு கேட்டிருந்தார். மத்திய அரசு இதனை ஏற்றுக்கொண்டு அவருடைய கிராமத்தில் இந்த சூரிய மின்சக்தியை செயல்படுத்த அனுமதி வழங்கி, அதற்காக கிராமத்தில் வசிப்பவர்களுக்குத் தேவையான அடுப்பினையும் வழங்கியது.
இந்தத் திட்டமானது மத்திய அரசால் பான்சா கிராமத்தில் 2018ஆம் ஆண்டு முன்னோட்ட மாதிரியாக தூய்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு, அதற்காக இரண்டு விருதுகளையும் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தத் திட்டம் டிசம்பர் 2018ஆம் ஆண்டு நிறைவுற்றது.
தொடர்ந்து பன்சா கிராமத்தில் குடியிருப்பவர்களில் இந்தத் திட்டம் பலவழிகளில் பயன் அடைகிறது. இது குறித்து அந்தக் கிராமத்தில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், தற்போது நாங்கள் காட்டிற்குச் சென்று பல மணிநேரம் செலவிட்டு அடுப்பு எரிப்பதற்காக விறகுகளைக் கொண்டுவரத் தேவையில்லை. மேலும், எங்கள் வீட்டு பாத்திரமும், சுவரும் கறுப்பு ஆவதில்லை. சமையலை குறித்த நேரத்தில் செய்ய முடிகிறது எனவும் தெரிவித்தார்.