தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 28, 2020, 6:44 PM IST

ETV Bharat / bharat

'நிலம், நீர், வானம் மூன்றிலும் சிறந்து விளங்கும் இந்தியப் பாதுகாப்புப் படை' - ராஜ்நாத் சிங்

டெல்லி: எதிரிகள், பயங்கரவாதத் தாக்குதலை எதிர்கொள்ள நிலம், நீர், வானம் என மூன்று தளங்களிலும் இந்திய ராணுவம் சிறந்து விளங்கும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Rajnath
Rajnath

விமான பாதுகாப்புப் படை சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். பாலக்கோட் விமானப்படை தாக்குதல் நினைவுதினத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முப்படைத் தளபதி பிபின் ராவத்தும் கலந்துகொண்டார்.

அப்போது பேசிய ராஜ்நாத் சிங், "நமது படைகள் தங்களின் இலக்குகளைச் சரியாக உணர்ந்து பயிற்சி பெற்று சிறப்பாகச் செயல்பட்டுவருகின்றன. தற்போதைய பலத்தைக்கொண்டு நிலம், நீர், வானம் என அனைத்து தளத்திலும் இந்திய ராணுவம் சிறப்பாகச் செயல்படும் உறுதியைக் கொண்டுள்ளது.

பாலக்கோட் தாக்குதல் அதற்குச் சிறந்த உதாரணம். எல்லைக்கு அச்சுறுத்தலாக உள்ள எதிரிகள், பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிடும் வல்லமையை இந்திய ராணுவம் சிறப்பாகப் பெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.

இந்த விழாவில் பேசிய முப்படைத் தளபதி பிபின் ராவத், "நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்ய ஒவ்வொரு ராணுவ வீரரும் அனைத்துவிதத்திலும் தயாராகியுள்ளனர். அதற்கு பாதுகாப்புத் துறையிடமிருந்த வலுவான உதவிகள் தொடர்ந்து கிடைப்பது ஆக்கப்பூர்வமான அம்சம்.

கார்கில், உரி, புல்வாமா என அனைத்துவிதமான சவால்களையும் எதிர்கொண்டு இந்திய ராணுவம் எழுந்து நின்றுள்ளது" எனப் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

இதையும் படிங்க:ட்ரம்ப் விருந்து: சிறிய நண்பருக்காக நேரம் எடுத்துக்கொண்ட 'இசைப்புயல்'

ABOUT THE AUTHOR

...view details