தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 14, 2019, 9:04 AM IST

ETV Bharat / bharat

அயோத்தியில் 144 தடை உத்தரவு!

லக்னோ: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில், அடுத்த மாதம் தீர்ப்பு அளிக்கப்பட உள்ள நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Ayodha call 144 imposed

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோயி அகாரா, ராம் லல்லா அமைப்புகள் பிரித்துக்கொள்ள வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றம் 2010ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது.

ஆனால், இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 14 மேல் முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இஸ்லாமியர் தரப்பு வாதத்தை இன்றைக்குள் (அக்டோபர் 14ஆம் தேதி) நிறைவு செய்யவும், அடுத்த இரண்டு நாட்களில் இந்து கட்சிகள் தங்களின் வாதத்தை நிறைவு செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அடுத்த மாதம் 17ஆம் தேதி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுவதற்கு முன்பு, அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்நிலையில் அயோத்தியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவை டிசம்பர் 10ஆம் தேதி வரை பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமார் ஜா உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:

உ.பி.யில் கோர விபத்து: நடைபாதையில் தூங்கிய ஏழு பேர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details