திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பான என்ஐஏ விசாரணையில், கேரள தகவல் தொழில் நுட்ப துறையில் அலுவலராக பணிபுரிந்த ஸ்வப்னா, அவரது நண்பர் சந்தீப் நாயர், சரீத்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
இதையடுத்து, களத்தில் இறங்கிய அமலாக்க துறையினர், ஸ்வப்னாவுக்கு பல வங்கிகளில் கணக்கு மற்றும் லாக்கர் இருப்பதை கண்டறிந்தனர். அந்த லாக்கர்களில் கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் இருந்ததாக கூறப்படுகிறது.