காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதி நீக்கப்பட்டதிலிருந்து இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவிவருகிறது. இந்நிலையில் பாகிஸ்தான் அமைச்சர் ஷேக் ரஷித் அகமத், "எங்களிடம் 125 - 250 கிராம் அணுகுண்டு உள்ளது. அது இந்தியாவின் குறிப்பிட்ட பகுதிகளில் வைத்து வெடிக்கப்படும்.
இந்தியா இரண்டு தவறுகளை செய்துள்ளது. ஒன்று அணு ஆயுத சோதனை நடத்தியது. இரண்டாவது காஷ்மீருக்கு அளிக்கப்பட்டுவந்த சிறப்புத் தகுதியை நீக்கியது" என்றார்.