தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 23, 2019, 6:32 PM IST

ETV Bharat / bharat

ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்கள்

மும்பை: எவாட்டில் பணத்தைத் திருடுவதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏடிஎம் இயந்திரத்தைத் தூக்கிச் சென்ற மர்ம நபர்கள்

புனே மாநிலம் எவாட்டில் அமைந்துள்ள அரசு வங்கி ஏடிஎம் மையத்துக்கு நான்கு நபர்கள் தலைக்கவசம் அணிந்து சென்றனர். அவர்கள் உடனடியாக சிசிடிவியை மறைப்பதற்கு அதில் திரவத்தைத் தெளித்தனர். இதனையடுத்து ஏடிஎம் இயந்திரத்தை ஸ்கார்பியோ வாகனத்தில் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள மற்ற கண்காணிப்பு படக்கருவிகள் மூலமாகக் கொள்ளை சம்பவம் பற்றிய காட்சிகளைச் சேகரித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரி கூறுகையில், ”ஏடிஎம் இயந்திரத்திலிருந்த 30 லட்சம் ரூபாயை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுள்ளனர். அவர்களைப் பிடிப்பதற்கு நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details