தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jul 23, 2020, 4:32 PM IST

ETV Bharat / bharat

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட உதவி ஆசிரியரின் உடல்!

ஹைதராபாத்: தற்கொலை செய்துகொண்ட கல்லூரி உதவி ஆசிரியர் ஒருவரின் உடல், இரண்டு நாள்களுக்கு பிறகு அழுகிய நிலையில் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.

assistant-professor-of-hyderabads-eflu-found-hanging-in-house
assistant-professor-of-hyderabads-eflu-found-hanging-in-house

ஹைதராபாத்திலுள்ள ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகளுக்கான பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்துவந்தவர் ராகுல் பலுசு. இவர் டர்னகா பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தார். மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்ந்த இவர், மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், இரண்டு நாள்களுக்கு முன்னதாக இவர் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள், காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், அழுகிய நிலையில் கிடந்த ராகுல் பலுசுவின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:கடத்தல்காரர்களிடம் போராடி குழந்தையை மீட்ட தாய் - வெளியான சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details