தமிழ்நாடு

tamil nadu

மணிப்பூரில் 76 லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்!

By

Published : Sep 12, 2020, 1:06 PM IST

மணிப்பூர்: 76 லட்சம் ரூபாய் மதிப்புடைய 380 கிராம் அளவிலான போதைப் பொருள்களை அஸ்ஸாம் ரைபில்ஸ் கைப்பற்றியதுடன், ஒருவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

smuggler
smuggler

அஸ்ஸாம் மாநிலம் தென்கொபால் மாவட்டத்தில் உள்ள இந்தியா-மியான்மர் எல்லைப் பகுதியில் அஸ்ஸாம் ரைபில்ஸ் மேற்கொண்ட சோதனையில் ஹாலன்பாய் கிராமத்திற்கு அருகே சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் கண்டறிப்பட்டன.

அப்போது இளைஞர் ஒருவரிடம் மேற்கொண்ட சோதனையில் சுமார் 380 கிராம் போதைப்பொருள் பறிமுதல்செய்யப்பட்டது. இதன் மதிப்பு 76 லட்சம் ரூபாய் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து அந்த இளைஞரிடம் மேற்கொண்ட விசாரணையில், பர்மாவைச் சேர்ந்த ஒருவர் மோரே பகுதிக்கு போதைப் பொருள்களைக் கொண்டுசெல்ல அவரை அறிவுறுத்தியது தெரியவந்தது. இது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டார்.

இந்த வழக்கு போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதையும் படிங்க:தங்கக் கடத்தல் வழக்கு: பினீஷ் கொடியேரியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details