தமிழ்நாடு

tamil nadu

அஸ்ஸாமில் கனமழையால் வெள்ளம்: ஆயிரக்கணக்கானோர் பாதிப்பு

By

Published : May 26, 2020, 2:15 PM IST

திஸ்பூர்: அஸ்ஸாமில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழையால் வெள்ளம்
பலத்த மழையால் வெள்ளம்

அஸ்ஸாமில் பல பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஐந்து மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்தக் கனமழை காரணமாக லக்கிம்பூர், தேமாஜி, திப்ருகார், தாரங், கோல்பாரா மாவட்டங்களின் எட்டு வருவாய் வட்டாரத்திற்குள்பட்ட 127 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் (ASDMA) தெரிவித்துள்ளது.

அதேநேரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்குவதற்காக 33 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட எட்டாயிரத்து 941 பேர் தஞ்சம் புகுந்துள்ளனர்.

மேலும் 500 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன, சில வயல்களில் வெள்ளநீர் அப்படியே நிற்கின்றது. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக மண்ணரிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

பலத்த மழையால் வெள்ளம்

இந்த மழை வெள்ளத்தால் எந்த உயிரிழப்பும் இதுவரை ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: டிடிஆருக்கு பரவிய கரோனா!

ABOUT THE AUTHOR

...view details