அருணாசலம் பிரதேசத்தில், கடந்த வியாழக்கிழமை(ஜூலை 16) எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ) இயக்குநர் லெப்டினென்ட் ஜெனரல் ஹர்பால் சிங், மாநில தலைமைச் செயலாளர் நரேஷ்குமார், பிற அலுவலர்களுடன் காணொலி வழியாக கலந்துரையாடினார்.
அப்போது பேசிய பிஆர்ஓ இயக்குநர் ஹர்பால், கரோனா தொற்றால் தொழிலாளர்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டதால் எல்லைகளில் சாலைப் பணிகள் தாமதமாகியுள்ளன.
அப்பணியை மீண்டும் விரைவுப்படுத்த வேண்டும். அனைத்து அலுவலர்களும் உத்வேகத்துடன் செயல்பட்டு பணியை முடிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார். மேலும், வீடியோ கான்பரன்சிங்கில் மாநிலத்தின் எல்லைகளில் நடைபெறும் அனைத்து சாலைப் பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது