காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருவனந்தபுரம் மக்களவை உறுப்பினர் சசி தரூர். இவர் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், `வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றால், இந்து பாகிஸ்தானாக இந்தியா மாறிவிடும்.
பாஜக புதிய அரசியலமைப்பை எழுதி உருவாக்குவார்கள்' என்று சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்துப் பேசினார். இதற்கு, பாஜக கண்டனம் தெரிவித்தது. கட்சி மேலிடமும் சசி தரூரை அழைத்து, `பொது நிகழ்ச்சிகளில் பேசும்போது கவனத்துடன் பேச வேண்டும்' என்று அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியானது.