தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உ.பி.யில் 3 ஆயிரம் டன் தங்கப்புதையல் - இந்தியாவுக்கு அடித்த லாட்டரி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியில் 3 ஆயிரம் டன் மதிப்பிலான தங்கச்சுரங்கத்தை இந்தியப் புவியியல் ஆய்வு மையம் (geological survey of India) கண்டுபிடித்துள்ளது.

Gold
Gold

By

Published : Feb 22, 2020, 11:41 AM IST

உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் உள்ள பனரி என்ற கிரமத்தில், சுரங்கம் தேடும் பணியை இந்தியப் புவியியல் ஆய்வு மையம் மேற்கொண்டது. அப்போது ஆச்சரியமளிக்கும் விதமாக பெரும் தங்கச்சுரங்கத்தை இந்தியப் புவியியல் ஆய்வு மையம் கண்டுப்பிடித்துள்ளது.

இந்தத் தங்கச்சுரங்கத்தில் சுமார் 3 ஆயிரம் டன் தங்கம் இருப்பதாக, முதற்கட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மாவட்ட சுரங்க அதிகாரி கே.கே ராய் கூறுகையில், "முதற்கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதன் விவரங்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு உடனடியாக அனுப்பிவைக்கப்படும்.

மேற்கண்ட நடவடிக்கைகள் முடிந்தபின் சுரங்கத்தை ஏலம் விடும் பணிகள் தொடங்கும். மத்திய அரசு ஏலத்திற்கு ஒப்புதல் அளித்தப்பின்னரே சுரங்கம் தோண்டும் பணி நடைபெறும்" என்றார். இந்தச் சுரங்கத்தில் தங்கத்துடன் சேர்த்து இரும்பு, பொட்டஷ் போன்ற தாதுக்களும் இருப்பதாகவும், சோன்பத்ரா சுரங்கத்தின் மதிப்பு, நாட்டின் தற்போதைய மொத்த தங்கப் இருப்பைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக மதிப்பை கொண்டதாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பார்தி இன்ஃப்ராடெல், இந்துஸ் டவர்ஸ் இணைப்புக்கு ஒப்புதல்

ABOUT THE AUTHOR

...view details