தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜம்மு காஷ்மீரில் பாக் அத்துமீறல் - ராணுவ வீரர் உயிரிழப்பு - பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்

ஸ்ரீநகர்: காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

Army
Army

By

Published : Jun 11, 2020, 11:51 AM IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூன்ஞ் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானதாகவும், சிலர் படுகாயமடைந்ததாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களாகவே பாகிஸ்தான் ராணுவம் இதுபோன்று அத்துமீறி தாக்குதல்களை நடத்திவருகிறது. குறிப்பாக நவ்ஷேரா, பூஞ்ச் ஆகிய பகுதிகளில் உள்ள கிரமங்களைக் குறிவைத்தே இதுபோன்ற தாக்குதல்கள் நடைபெற்றுவருகின்றன. இது அப்பகுதியில் வசிப்பவர்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

மக்களை தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் விதமாக பதுங்குகுழிகள் அமைக்கும் பணிகளில் ராணுவம் ஈடுபட்டுவருகிறது. அத்துடன் உளவாளிகள், பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவதைத் தடுக்கும் விதமாக எல்லையில் ரோந்து பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:தீண்டாமை கொலை: கோயிலுக்குள் சென்ற பட்டியலின சிறுவனுக்கு நேர்ந்த கதி!

ABOUT THE AUTHOR

...view details