ஹரியானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் மனோஜ் குமார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் நேற்று முன்தினம் (ஜூலை 22) இரவு 8 மணியளவில் பணிக்கு சென்றார். பின்னர், 9.30 மணியளவில் மனோஜ் பணியிலிருக்கும் இடத்திலிருந்து துப்பாக்கி சுடும் சத்தம் அருகிலிருக்கும் சக ராணுவ வீரர்களுக்கு கேட்டது.
பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் சுட்டுக்கொலை - ஹரியானாவில் துப்பாக்கி சூடு
சண்டிகர்: ஹரியானாவில் பாதுகாப்பு பணியிலிருந்த ராணுவ வீரர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீரர்
இதையடுத்து, அப்பகுதிக்கு உடனடியாக விரைந்த ராணுவ படை, மனோஜ் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடைபெற்றது தெரியவந்துள்ளது. உடனடியாக மனோஜை அருகிலிருக்கும் ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு பிறகு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.