தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்திய - சீன பதற்றம்: லடாக்கிற்குச் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி - ராணுவ தளபதி முகுந்த் நாரவனே

டெல்லி: இந்திய, சீன நாடுகளுக்கிடையே பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில், எல்லை பகுதியான லடாக்கிற்கு செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி முகுந்த் நரவணே ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

ராணுவ தளபதி
ராணுவ தளபதி

By

Published : Sep 3, 2020, 12:23 PM IST

கல்வான் மோதலைத் தொடர்ந்து, இந்திய சீன நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவிவருகிறது. இதற்கிடையே, எல்லைப் பகுதியான லடாக்கிற்குச் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி முகுந்த் நரவணே ஆய்வு மேற்கொள்ளவுள்ளார். களநிலவரம் குறித்து உயர்மட்ட அலுவலர்கள், நரவணேவிடம் விளக்கம் அளிக்கவுள்ளனர். தெற்கு பாங்காங் சோ ஏரி அருகே சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைந்ததாகப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டது.

கல்வான் மோதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை சீன மீறியுள்ள நிலையில், லடாக்கிற்குச் செல்லும் ராணுவத் தலைமைத் தளபதி எல்லையில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளவுள்ளார்.

முன்பு நிலைபெற்ற பகுதியிலிருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ சீன முயற்சித்துள்ளது. ஆனால், இந்திய ராணுவ வீரர்களின் முயற்சியினால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

இதையும் படிங்க: கரோனா சவால்களை எதிர்கொள்ள கைக்கோக்கும் இந்திய, அமெரிக்க விஞ்ஞானிகள்

ABOUT THE AUTHOR

...view details