இந்தியாவின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம் சார்பில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட பிரம்மோஸ் ஏவுகணை இந்திய கடற்படையினரால் இன்று பரிசோதனை செய்யப்பட்டது.
அந்தமான் நிக்கோபார் தீவு பகுதிக்குள்பட்ட கார் நிக்கோபர் தீவில் இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். ராண்விஜய் போர் கப்பலிலிருந்து அதிநவீன பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று காலை விண்ணில் ஏவி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.