தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேரவைக்குள் ஆளுநருக்கு எதிராக எழுந்த கோஷம்: புடைசூழ அழைத்துச் செல்லப்பட்ட  ஆரிஃப்! - கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கானை வழிமறித்த சட்டபேரவை உறுப்பினர்கள்

திருவனந்தபுரம்: கேரள ஆளுநரான ஆரிஃப் முகமது கான் இன்று மாநில சட்டபேரவைக்கு வந்தார். அப்போது அவரை முற்றுகையிட முயன்று காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

Oppn MLAs protest against Governor Arif Mohammad Khan
Oppn MLAs protest against Governor Arif Mohammad Khan

By

Published : Jan 29, 2020, 10:24 AM IST

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடன் அம்மாநில ஆளுநர் ஆரிஃப் முகமது கான் சட்டப்பேரவைக்கு வந்தார். அப்போது அவருக்கு எதிராக நின்ற ஐக்கிய ஜனநாயக முன்னணி கூட்டணியின் எம்எல்ஏக்கள், 'இந்திய மக்களாகிய நாங்கள் சி.ஏ.ஏ.வை எதிர்க்கிறோம்' என்று முழக்கமிட்டனர். மேலும் மேடைக்குச் செல்லும் ஆளுநரின் பாதையையும் வழிமறித்தனர்.

அப்போது ஆளுநர் நிதானமாகப் புன்னகைத்து நின்றுகொண்டிருந்தார். இதையடுத்து, அருகே நின்றுகொண்டிருந்த முதலமைச்சர் பினராயி விஜயன், எம்எல்ஏக்களை வழிவிடக்கோரி குறிப்பால் உணர்த்தினார்.

ஆளுநரை அவமதித்த கேரள எம்.எல்.ஏக்கள்

சூழ்நிலையை சமாளிக்க சட்டப்பேரவை காவலர்கள் உள்ளே நுழைந்து ஆரிஃப் முகமது கானை புடைசூழ பாதுகாத்து ஆளுநர் மேடைக்கு அழைத்துச் சென்றனர். பின் ஆளுநர் தன் உரையை தொடங்கியபின் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வெளியே சென்று உள்ளிருப்புப் போரட்டத்தைத் தொடங்கினர்.

இதையும் படிங்க: 'பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேத்துக்க சொன்னதே அமித் ஷா தான்' - நிதிஷ் குமார்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details