தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 8, 2021, 3:47 PM IST

ETV Bharat / bharat

கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமி வன்புணர்வு - இளைஞர் போக்சோவில் கைது

உத்தரப் பிரதேசம் மாநிலம் பதோன் மாவட்டத்தில் கோயிலுக்குச் சென்றுகொண்டிருந்த 15 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த நபரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

Another rape in Badaun UP one held
Another rape in Badaun UP one held

உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள பதோன் மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் வீட்டுக்கு அருகே உள்ள கோயிலுக்குச் சென்றுள்ளார். இதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த வீர் பால் (20) என்பவர் சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று தனது உறவினரின் வீட்டில் வைத்து பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இந்தக் குற்றச் சம்பவத்திற்கு உதவும்விதமாக அவரின் உறவினர் வீட்டின் முன்பு காவலுக்காக நின்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் சிறுமி வீட்டிற்கு வராததால் அவரது உறவினர்கள் அவரைத் தேட ஆரம்பித்துள்ளனர். அப்போது சிறுமி அதே பகுதியில் இருந்த வீர் பாலின் உறவினர் வீட்டில் இருப்பதைக் கண்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இது குறித்து சிவில் லைன்ஸ் காவல் நிலைய ஆய்வாளர் கூறுகையில், "சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம். மருத்துவ அறிக்கைக்காக தற்போது காத்துள்ளோம். எல்லா கோணங்களிலிருந்தும் இந்த வழக்கை விசாரித்துவருகிறோம்" என்றார்.

தற்போது சிறுமியை வன்புணர்வு செய்த இளைஞரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர். இச்சம்பவத்திற்குத் துணைபோன குற்றவாளியின் உறவினரைத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க... கோயிலுக்குள் பெண்ணுக்கு நடந்த கொடூரம் - இருவர் கைது

ABOUT THE AUTHOR

...view details