ஆந்திர மாநிலத்தில் மணல் விற்பனை குறைந்துள்ளதாகவும் ஏற்றுமதியில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சில நாள்களுக்கு முன்னதாக எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டியிருந்தனர். பின்னர் இது குறித்து ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டார்.
இதையடுத்து, செய்தியாளர்களிடம் ஜெகன்மோகன் பேசுகையில், "மணல் விற்பனையை அதிகரிப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் அவசரச்சட்டம் நிறைவேற்றப்பட்டு, அதனை சட்டமாக மாற்ற ஒப்புதல் பெறப்படும். இந்தச் சட்டத்தின் மூலம் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட துறை அலுவலர்களுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்படும். அதன்மூலமாக மணல் விற்பனை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.