உலகநாடுகளை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை 22,51,517 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,54,278 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இதன் தாக்கம் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. நாட்டில் இதுவரை இத்தொற்றால் 14, 378 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் சிகிச்சை பலனின்றி 480 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 31 பேருக்கு கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் கண்டறியப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக கிருஷ்ணா மாவட்டத்தில் 18 பேருக்கும், கர்னூல் மாவட்டத்தில் ஐந்து பேருக்கும், நெல்லூரில் இரண்டு பேருக்கும் இத்தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.