கரோனா பொதுமுடக்கம் காரணமாக உலகம் முழுவதும் உள்ள மக்கள் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள் பற்றி பல கதைகளை படித்திருப்போம். ஆனால், இந்தக் கதை முற்றிலும் வேறுபட்டது.
கரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடியை ஐரோப்பியர் ஒருவர் சவாலாக மாற்றியுள்ளார். இத்தாலியைச் சேர்ந்தவர் டேவிட் (47). இவர் கடந்த ஆணடு கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
அப்போது, டேவிட் நம்பிக்கையை இழக்காமல், மீனாட்சியம்மா, அவரது குழுவினருடன் இணைந்து களரிக் கலையை அவர் கற்கத் தொடங்கினார். ‘மனமிருந்தால் மார்க்கமுண்டு’ என்ற பழமொழி அவருக்கு சரியாக இருந்தது. மீனாட்சியம்மா, டேவிட் தங்குவதற்கு ஒரு இடத்தை வழங்கினார்.