தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 31, 2019, 9:42 PM IST

ETV Bharat / bharat

67ஆவது நேரு கோப்பை படகுப் போட்டி: முதலிடத்தை பிடித்த நடுபாகம் சுண்டன்..!

கேரளா: ஆலப்புழாவில் 67ஆவது நேரு கோப்பை படகுப் போட்டி அந்த மாநில முதலமைச்சர் பினராயி விஜயனால், புன்னமடா என்ற இடத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்கப்பட்டது.

67ஆவது நேரு கோப்பை படகுப் போட்டி

நேரு கோப்பை படகுப் போட்டி (Nehru Trophy Boat Race) கேரள மாநிலத்தில் ஆலப்புழா எனும் இடத்தில் வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் ஏதாவது ஒரு சனிக்கிழமையன்று நடைபெறும். இதை வள்ளங்களி (வள்ளம் - படகு , களி - விளையாட்டு) என்றும் மலையாள மொழியில் கூறுவர். இந்நிகழ்ச்சியின் புகழ்பெற்ற போட்டி என்பது பாம்புப் படகுப்போட்டி ஆகும். இதனை மலையாளத்தில் சுண்டான் வள்ளம் என்றும் அழைப்பர். இது ஒரு முக்கியமான சுற்றுலா நிகழ்வாக அமைகிறது. பல்வேறு நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் இதைக் கண்டு ரசிக்க வருவர்.

பாம்புப் படகுப் போட்டி தவிர சுருளான் படகு, இருட்டுக்குதி படகு, ஓடிப் படகு, வைப்புப் படகு, வடக்கே ஓடும் படகு, சிறிய படகு எனும் பெயர்களிலும் போட்டிகள் நடைபெறுகின்றன. இப்போட்டிகள் 1952ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகின்றன. 1952ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமராக இருந்த நேரு அவர்கள் கேரளாவிற்குச் செல்லும் போது முன் கூட்டியேத் திட்டமிடாத முதல் போட்டி நடைபெற்றது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேரு பரிசு வழங்கினார். அதன் பின் ஒவ்வொரு வருடமும் இப்போட்டியானது அவர் பெயரிலேயே நடந்து வருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறுபவர்கள் திருவாங்கூர் கொச்சி சமூகத்தில் நல்ல மரியாதையையும் அந்தஸ்தையும் பெறுவர்.

67ஆவது நேரு கோப்பை படகுப் போட்டி

இவ்வருடத்திற்கான இந்த படகுப் போட்டி இன்று முதலமைச்சர் விஜயனால், புன்னமடா என்ற இடத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைக்கப்பட்டது. இப்போட்டிக்கான சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கலந்துகொண்டார். இச்சிறப்புமிக்க 67ஆவது நேரு கோப்பைப் படகுப் போட்டியில் 79 படகுகள் பங்குபெற்றது. இன்றைய போட்டியில் நடுபாகம் சுண்டன் படகு முதலிடத்தையும், சம்பக்குளம் படகு இரண்டாம் இடத்தையும் கைப்பற்றியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details