அருணாச்சல பிரதேச தேசிய நெடுஞ்சாலையான NH39ல் கள்ளச்சாராயம் அடிக்கடி கடத்தப்படும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக கள்ளச்சாராய தடுப்பு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று ரெய்டு செய்த காவலர்கள், அங்கேயிருந்த கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பின்னர் ரெய்டு முடிவடைந்ததையடுத்து, சம்பவ இடத்திலிருந்து திரும்பிய காவல் துறை வாகனம் மீது ட லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காவல் ஆய்வாளர் சமூ மைபோங்சா சம்பவ இடத்திலும், கான்ஸ்டபிள் ரோமன் மருத்துவமனையிலும் உயிரிழந்தனர்.