உத்தரப் பிரதேசம் அலிகார் நகரத்தில் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் இயங்கிவருகிறது. இந்தப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் பி.ஹெச்.டி. மாணவராக இருந்தவர் ஏ. ஏ. ஹமித். ஈராக் நாட்டைச் சேர்ந்த இவர், அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்துவந்தார். நீண்ட நேரமாகியும் சம்பவ தினத்தன்று வீட்டை விட்டு இவர் வெளியே வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதையடுத்து, அண்டை வீட்டில் வசிக்கும் ஷாபாத் இக்பால் என்ற பெண்மணி காலை 11 மணி அளவில் வீட்டு கதவை தட்டியுள்ளார். ஆனால், நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால், அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.