மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நாட்டின் பல்வேறு பகுதியில் போராட்டம் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டு 13 நாட்களாக போராடிவருகின்றனர்.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியை சேர்ந்த 32 வயது விவசாயி அஜய் மூர் என்பவர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார். இவர், நேற்றிரவு (டிச.7) ஹரியானா-டெல்லி எல்லையில் உள்ள சாலை ஓரத்தில் படுத்து உறங்கியுள்ளார். மறுநாள் காலை அவர் மரணமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.