தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனா நெருக்கடிக்கு மத்தியில் 50 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம்! - மத்தியப் பிரதேசத்தில் கரோனா பாதிப்பு

போபால்: கோவிட்-19 தொற்றால் ஏற்கனவே நெருக்கடியான நிலையில் சிக்கியுள்ள மத்தியப் பிரதேச மாநிலத்தில் தற்போது 50 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Shivraj Singh Chauhan
Shivraj Singh Chauhan

By

Published : May 10, 2020, 4:51 PM IST

கோவிட்-19 தொற்று இந்தியாவில் பரவத் தொடங்கியபோதுதான் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பாஜவின் சிவராஜ் சிங் சவுஹான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்போது அவருடன் வேறு யாரும் அமைச்சர்களாக பொறுப்பேற்கவில்லை.

இதனால் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமாகப் பரவத் தொடங்கியபோது மத்தியப் பிரதேசத்தில் சுகாராதத் துறைக்கென்று தனியாக ஒரு அமைச்சர் இல்லாமல், முதலமைச்சரே அனைத்துப் பணிகளையும் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சில வாரங்களுக்கு முன் சுகாதாரத் துறை உட்பட முக்கிய துறைகளுக்கு மட்டும் அமைச்சர்கள் பொறுப்பேற்றனர். இருப்பினும் இதுவரை மத்தியப் பிரதேசத்தில் கோவிட்-19 பாதிப்பு முற்றிலும் கட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை.

இந்நிலையில், மாநிலத்தில் பணிபுரிந்துவரும் 50 ஐஏஎஸ் அலுவலர்களுக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணை சனிக்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி முன்னாள் தலைமைச் செயலர் கோபால் ரெட்டி குவாலியரில் வருவாய் வாரியத்தின் தலைவராகவும், ஐ.சி.பி. கேஷரி நர்மதை பள்ளத்தாக்கு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவராகவும், வினோத் குமார் பொது தலைமைச் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தவிர கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு தற்போது குணமடைந்துள்ள இரண்டு ஐஏஎஸ் அலுவலர்களுக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 187 தமிழர்களுடன் இந்தியா வந்தடைந்தது சிறப்புக் கப்பல்!

ABOUT THE AUTHOR

...view details