தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 4, 2019, 12:48 PM IST

ETV Bharat / bharat

“நாளை தேர்தல், நள்ளிரவில் ரெய்டு” பரபரக்கும் கர்நாடகா.!

பெங்களுரு: கர்நாடகாவில் நாளை (டிச.5) இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், நேற்றிரவு காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் ஐ.டி. ரெய்டு (வருமான வரித்துறை) நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Amid by poll -  IT Raids on congress candidate k.b.koliwad house at ranebennuru
Amid by poll - IT Raids on congress candidate k.b.koliwad house at ranebennuru

கர்நாடகாவில் காலியாகவுள்ள 17 சட்டப்போரவை தொகுதிகளுக்கு முதல்கட்டமாக 15 தொகுதிகளுக்கு நாளை (டிச.5) இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் ரானிபென்னாரு (Ranibennuru) தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கே.பி. கோலிவாடா போட்டியிடுகிறார்.
இவருக்குச் சொந்தமான வீடு வாகீஸ் (Vageesh colony) காலனியில் உள்ளது. இங்கு நேற்றிரவு (டிச.3) 10 மணியளவில் ஐ.டி. அலுவலர்கள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக செய்திகள் ஊடகங்களில் வெளியானது.

இருப்பினும் இந்த தகவலை ஐ.டி. அலுவலர்கள் மறுத்துள்ளனர். இருப்பினும் இந்த சோதனையை தேர்தல் அலுவலர்கள் உறுதிப்படுத்தி உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர் கோலிவாடா தனது வீட்டில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கும் நோக்கத்தில் ரூ.10 கோடி மதிப்பில் மதுபானம் வாங்கி பதுங்கி வைத்துள்ளதாக பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்ததாக அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
இந்த சோதனையில் மதுபானம் உள்ளிட்ட எந்த பொருளையும் அலுவலர்களால் கைப்பற்ற முடியவில்லை. வெறுங்கையுடனே வெளியேறினர். காங்கிரஸ் வேட்பாளர் வீட்டில் சோதனை நடந்த போது, அக்கட்சி தொண்டர்களுக்கும் அலுவலர்களுக்குமிடையே வார்த்தை மோதல் வெடித்தது. இதனால் அந்த நள்ளிரவில் பதற்றமான சூழல் நிலவியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு காவலர்கள் குவிக்கப்பட்டனர். இந்த சோதனைக்கு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் பி.எஸ். எடியூரப்பா தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. நடைபெறவுள்ள 15 சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி தோல்வியை தழுவும் பட்சத்தில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.
2018 சட்டமன்ற தேர்தலில் பாஜக 104 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. ஆளும்கட்சியான காங்கிரசுக்கு 80 தொகுதிகள் கிடைத்தது. இதையடுத்து 37 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த குமாரசாமி கட்சியுடன் கூட்டணி வைத்து அவரை முதலமைச்சர் ஆக்கினார்கள்.

காங்கிரஸ் ஆதரவாளர்கள் எதிர்ப்பு

அந்த கட்சிகளிலிருந்து 17 சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க தயாரானார்கள். இதையடுத்து சபாநாயகர் அவர்களை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். சபாநாயகரின் உத்தரவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கர்நாடக இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பாடம் கற்பிக்கப்படும்: மல்லிகார்ஜூன கார்கே

ABOUT THE AUTHOR

...view details