தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமீர்பேட்- ஹைடெக் சிட்டி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - மெட்ரோ ரயில் சேவை

ஹைதரபாத்: மக்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமீர்பேட்- ஹைடெக் சிட்டி இடையிலான மெட்ரோ ரயில் சேவையை தெலங்கானா ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மன் நாளை திறந்து வைக்கிறார்.

மெட்ரோ ரயில்

By

Published : Mar 19, 2019, 5:04 PM IST

தெலங்கனா மாநிலம், ஹைதராபாத் நகரம் ஐ.டி நிறுவனங்கள் நிறைந்த பகுதியாகும். மாநிலத்தின் இதயப்பகுதியான இந்த பகுதியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முக்கிய பங்குகாற்றுகின்றன. ஏற்கனவே இரண்டு கட்டமாக மெட்ரோ சேவை இயக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது இறுதி கட்டமாக அமீர்பேட் - ஹைடெக் பகுதிக்கு இடையே பணிகள் நடைபெற்று வந்தது. இந்த பணிகள் முடிவடைந்த நிலையில், இதை ஆளுநர் இஎஸ்எல் நரசிம்மன் நாளை திறந்து வைக்கிறார்.

அதன் பின்னர் மாலை 4 மணிக்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும். பத்து கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த வழித்தடத்தில் ஹைடெக் சிட்டி, மாதபூர், ஜூப்ளி ஹீல்ஸ், காச்சிபவூளி ஆகிய 8 நிலையங்கள் உள்ளன. இந்த தூரம் சுமார் 9 - 12 நிமிடங்களில் சென்றடையும். இந்த நிகழ்வில் குறைந்தளவிலே சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொள்வதாக மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செக்கந்திராபாத், எல்பி நகர் ஆகிய வழிதடங்களில் இரண்டு கட்டமாக மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.


ABOUT THE AUTHOR

...view details