உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கரோனா தொற்று இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிகிறது. இதன் காரணமாக, அங்கு இதுவரை 4 ஆயிரத்து 147 பேர் பாதிக்கப்பட்டும், 58 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது ஆயிரத்து 552 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப்பெற்று வருவதாகவும், 2 ஆயிரத்து 537 பேர் கோவிட்-19 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா பாதிப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் பணிகளில் காவல் துறை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை என, மாநகராட்சி நிர்வாகத்தின் பல்வேறு துறை சார்ந்தவர்களும் ஈடுபட்டுவருகின்றனர். முகக்கவசம், கபசுரக் குடிநீர் வழங்குதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, மருத்துவ முகாம் மற்றும் நடமாடும் பரிசோதனை மையங்களை அமைத்து மக்களுக்கு கரோனா கண்டறிதல் சோதனை செய்யப்பட்டுவருகிறது. இது தொடர்பாக இன்று (ஆக.5) ஊடகங்களைச் சந்தித்துப் பேசிய புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ்,"புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட காரைக்கால், மாகே மற்றும் ஏனம் ஆகிய பகுதிகளில், நேற்று(ஆக.4) காலை 10 மணியிலிருந்து இன்று காலை 10 மணி வரை ஆயிரத்து 24 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.