அண்மையில் மத்திய அரசு விவசாயம் தொடர்பாக மூன்று சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம். 2. விவசாயிகள் விளைபொருள்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 3, அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் இந்தச் சட்டத்திற்கு தமிழ்நாடு திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டம் என்றும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக உள்ளதாகவும் விமர்சித்து வருகின்றனர். ஆனால், அதிமுக எம்பி ஓ.பி.ரவிந்திரநாத் குமார் வேளாண் மசோதாவை ஆதரித்து பேசியுள்ளார்.