பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாட்கள் பயணமாக தாய்லாந்து சென்றுள்ளார். அங்கு அவர் ஆசிய பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 16 நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட பிராந்திய விரிவான பொருளாதார கூட்டு உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும் சில கோரிக்கைகளையும் இந்தியா சார்பில் முன்வைத்தார்.
இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள தென்சீன காலை நாளிதழ், 'பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க அதிகாரிகள் திரைக்குப் பின்னால் செயல்படுகிறார்கள்' என்று குறிப்பிட்டிருந்தது. முன்னதாக மாநாட்டில், ஆசிய நாடுகள் உச்சி மாநாட்டில் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட ஆறு நாடுகளுக்கு இடையிலான சுதந்திரமான வர்த்தக ஒப்பந்தம் முன்மொழியப்பட்டது.
பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டு (RCEP) ஒப்பந்தத்தில் உள்ள 16 நாடுகள், உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டிருக்கும். மேலும் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி மற்றும் டிரில்லியன் கணக்கான டாலர் வர்த்தகத்தை உள்ளடக்கியது.
இதைக் குறிப்பிட்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, 'இந்தியாவிற்கும் ஆசியாவுக்கும் இடையில் தற்போதுள்ள வர்த்தக ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டினார்.