காங்கிரஸ் ஆட்சியில் ப. சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது, 2006ஆம் ஆண்டு மலேசிய நிறுவனமான மேக்சிஸ், ஏர்செல் நிறுவனத்தில் ரூ. மூன்று ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இந்த முதலீட்டுக்கு ப. சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் உதவி செய்துள்ளது.
இதில் முறைகேடு நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததையடுத்து ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழக்குப் பதிந்து அமலாக்கத் துறையும், சிபிஐ-யையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.