தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை!

டெல்லி: கடும் காற்று மாசு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து டெல்லி முதலமைச்சர் உத்தரவு பிறபித்துள்ளார்.

By

Published : Nov 1, 2019, 11:55 PM IST

Delhi

தேசிய தலைநகரான டெல்லியில் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு நாளுக்கு நாள் மோசமாகிவருகிறது. இந்த வரலாறு காணாத மாசு காரணமாக டெல்லியிலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் 5ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜிர்வால் அறிவித்துள்ளார்.

ஹரியாணா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் விவசாய கழிவுகளை எரிப்பதன் காரணமாக டெல்லியில் காற்றுமாசு அதிகரித்துவருகிறது. இந்தியா கேட் உட்பட டெல்லியின் பல முக்கிய இடங்களில் காற்று மாசு கடுமையாக உள்ளது.

இதன் காரணமாக டெல்லியில் நடைபெறவிக்கும் இந்தியா - வங்கதேச அணிகளுக்கிடையேயான போட்டியை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா பாக்தாதியின் கொலை?

ABOUT THE AUTHOR

...view details