லண்டனில் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் 326 பேர் "வந்தே பாரத் திட்டம்" இன் கீழ் விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 12.30 மணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை, ரியாத்தில் இருந்து சுமார் 139 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். "வந்தே பாரத் திட்டம்' இன் நான்காவது நாளில், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இங்கிலாந்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களை நாட்டின் பல நகரங்களுக்கு அழைத்து வந்தனர்.