தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் - puducherry state news

புதுச்சேரி: ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர் போராட்டம்
அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் தொடர் போராட்டம்

By

Published : Oct 2, 2020, 12:23 AM IST

புதுச்சேரியில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில் செப்டம்பர் 28ஆம் தேதிமுதல் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

நான்காவது நாளான நேற்று (அக். 1) அந்தக் கூட்டமைப்பின் கௌரவத் தலைவர் சேஷாசலம் தலைமையில் ஆசிரியர்கள் கண்களில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இதில் அதன் துணைத்தலைவர் ஆல்பர்ட் மார்ட்டின், நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் அரசு சம்பளம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடும் வரை போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆக்சிஜன் இடையூறால் உயிரிழப்புகள் - ஆட்சியரை மாற்ற வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்!

ABOUT THE AUTHOR

...view details