உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மக்களுக்குத் தொடர்ந்து, பரிசோதனை செய்வது மட்டுமே வழி என சிலர் கூறுகின்றனர். இதனால் கரோனா பரிசோதனையை அதிகப்படுத்த வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து ரேபிட் டெஸ்ட் கிட் எனப்படும் கரோனா பரிசோதனைக் கருவி வாங்கப்பட்டது.
இதனை 600 ரூபாய்க்கு மத்திய அரசு வாங்கியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ரூ.245க்கு வாங்கப்பட வேண்டிய ரேபிட் டெஸ்ட் கிட்டை ரூ.600 கொடுத்து வாங்கியது ஏன்? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.