காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராக அறியப்படுபவர் அகமது படேல். தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அகமது படேலுக்கு கடந்த அக்டோபர் மாதம் 1ஆம் தேதி கரோனா உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, அவர் குருகிரமில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அகமது படேலின் மகன் பைசல் படேல் தனது ட்விட்டரில், "அகமது படேல் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் நிலை சீராக உள்ளது. மேலும், மருத்துவர்கள் அவரது உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.