தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஷிரடி பிரச்னையை முடித்துவைத்த உத்தவ் தாக்கரே - ஷீரடி பிரச்னையை முடித்து வைத்த உத்தவ் தாக்கரே!

மும்பை: புகழ்பெற்ற சாய்பாபா கோயிலான ஷிரடியில் வசிப்பவர்கள், இன்று மும்பையில் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை சந்தித்த பின்னர் காலவரையற்ற பந்த்தை நிறுத்தியுள்ளனர்.

Ahead of CM's meet, indefinite shutdown of Shirdi called off
Ahead of CM's meet, indefinite shutdown of Shirdi called off

By

Published : Jan 21, 2020, 7:41 AM IST

Updated : Jan 21, 2020, 8:57 AM IST

சாய்பாபா பிறப்பிட சர்ச்சை குறித்து விவாதிக்க தாக்கரே, சியாத்ரி விருந்தினர் மாளிகையில் ஷிரடி உள்ளூர்வாசிகள், கோயில் அறங்காவலர்கள் ஆகியோர்களுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.


அப்போது சாய்பாபாவின் பிறப்பிடமாக பத்ரி என்று கூறிய தனது கருத்தை உத்தவ் தாக்கரே திரும்பப்பெற்றுக்கொண்டதாகவும், இதனால் ஷிரடியிலிருந்து வந்த தூதுக்குழு திருப்தி அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூட்டத்தில் ஷிரடி பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராதாகிருஷ்ணா வி.கே. பாட்டீல் கலந்துகொண்டார். முதலமைச்சருடனான கூட்டத்திற்குப் பிறகு வி.கே. பாட்டீல், கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் திருப்தியடைந்துள்ளனர் எனக் கூறினார்.

மேலும் ஷிரடியில் வசிப்பவர்கள் புனித யாத்திரை மையத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் அவர் கூறினார்.

இந்தக் கூட்டத்திற்கு பத்ரி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அழைக்கப்படவில்லை. இருப்பினும், பத்ரி மக்களுடன் உத்தவ் தாக்கரே அடுத்துவரும் நாட்களில் சந்திப்பை நடத்துவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பதவியை ராஜினாமா செய்தேனா? ஷாக்கான அப்துல் சட்டார்!

Last Updated : Jan 21, 2020, 8:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details