தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தான் கிராமத்தின் 25 ஆண்டு கால தண்ணீர் தாகத்தை தீர்த்த வேளாண் பல்கலைகழகம்!

ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள கிராமத்தின் 25 ஆண்டு கால தண்ணீர் தாகத்தை தீர்த்துவைத்த ஸ்ரீ கரண் நரேந்திர வேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய திட்டம் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

ராஜஸ்தான் கிராமத்தின் 25 ஆண்டு கால தண்ணீர் தாகத்தை தீர்த்த வேளாண் பல்கலைகழகம்!
ராஜஸ்தான் கிராமத்தின் 25 ஆண்டு கால தண்ணீர் தாகத்தை தீர்த்த வேளாண் பல்கலைகழகம்!

By

Published : Jul 15, 2020, 3:54 PM IST

இந்தியாவின் பெரிய பாலைவனமான தார் பாலைவனம் முதற்கொண்டு பல பாலைவனப் பகுதிகளைத் தன்னகத்தே கொண்டதுதான் ராஜஸ்தான். இங்கு ஒரு பிரபலமான பழமொழி ஒன்று உள்ளது. ”தண்ணீரின் மதிப்பு தனக்குத் தெரியும் என பீற்றிக்கொண்டால், அவர் பொய் சொல்கிறார் அல்லது அவருக்கு சொந்த ஊரு ராஜஸ்தானாக இருக்கனும்” என்பதுதான் அந்த பழமொழி. இந்த பழமொழி மூலம் ராஜஸ்தானில் மக்கள் எந்தளவுக்கு தண்ணீர் பற்றக்குறையால் வாடிவருகின்றனர் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.

இங்குள்ள குழந்தைகளுக்குக்கூட தெரியும் தண்ணீரின் அருமை. தண்ணீரின் தேவை, அருமையை நீங்கள் அறிய வேண்டுமென்றால், ராஜஸ்தானில் நீங்கள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்பார்கள். அப்படி ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூருக்கு அருகில் உள்ள ஊரான ஜாப்னர் பகுதி மக்கள் 25 ஆண்டு காலமாக தண்ணீர் பற்றாக்குறையில் தவித்துவந்துள்ளனர்.

அந்த தவிப்பின் தாகத்தைத் தீர்த்துள்ளது ஸ்ரீ கரண் நரேந்திர வேளாண் பல்கலைக்கழகம். அதன்படி நகராட்சி உதவியுடன் ஜவாலா மாதா கோயிலின் அருகில் உள்ள மலையிலிருந்து கீழே வரும் நீரை 33 லட்சம் லிட்டர் திறன் கொண்ட மூன்று குளங்களிலும், அதுவும் நிரம்பும் பட்சத்தில் மூன்று கோடி லிட்டர் கொள்ளளவு கொண்ட மற்றோரு குளத்திலும் சேமித்துவருகின்றனர். இதன் மூலம் ஜாப்னர் கிராமம் மட்டுமின்றி அருகிலுள்ள கிராமங்களின் தண்ணீர் தேவையும் பூர்த்தி செய்யப்படுகிறது.

ராஜஸ்தான் கிராமத்தின் 25 ஆண்டு கால தண்ணீர் தாகத்தை தீர்த்த வேளாண் பல்கலைகழகம்!

கிராமத்தின் தண்ணீர்த் தேவைக்காக அமைக்கப்பட்ட குளத்தின் மூலம் விவசாயம் நல்ல முறையில் நடைபெறுவது மட்டுமின்றி நீர் மட்டமும் உயர்கிறது என்கிறார் திட்டத்திற்கு மூளையாகச் செயல்படும் பல்கலைக்கழகத்தின் முன்னாள் முதல்வர் ஜி.எஸ்.பங்ரவா.

ராஜஸ்தானுக்கு இந்தத் திட்டம் அதிமுக்கியமானது. ஏனெனில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்திருப்பதால் மாநிலத்திலுள்ள 185 பகுதிகள் கறுப்பு மண்டலத்தில் (Dark Zone) உள்ளன. இத்திட்டம் மற்ற பகுதிளுக்கும் சென்றடைந்து, கறுப்பு மண்டல பகுதிகள் பசுமைப் பகுதிகளாகக் காட்சியளிக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

இந்தத் திட்டம் ராஜஸ்தானுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் வறட்சியாக இருக்கும் தருமபுரி, சிவகங்கை, ராமநாதபுரம், முக்கியமாக சென்னையின் தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்யப் பயன்படும்; நீர் மட்டத்தையும் அதிகரிக்கலாம்.

இதையும் படிங்க...தோல்வி அடைந்த நாடுகள் செய்த தவறை இந்தியா செய்துவிடக் கூடாது - மூத்த பொருளாதார வல்லுநர் கவுசிக் பாசு

ABOUT THE AUTHOR

...view details