தமிழ்நாடு

tamil nadu

இனி காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒலிக்கும் பாட்டு கச்சேரி: இளைஞர்கள் முன்னெடுப்பு!

By

Published : Aug 26, 2020, 10:05 AM IST

Updated : Aug 27, 2020, 10:00 AM IST

ஜம்மு: காஷ்மீர் இளைஞர்கள் மூன்று பேர் சேர்ந்து இசைக் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

Against all odds, Kashmiri youths start musical band in Pulwama
Against all odds, Kashmiri youths start musical band in Pulwama

இந்திய - பாகிஸ்தான் எல்லையான காஷ்மீர் பள்ளத்தாக்கில் அடிக்கடி போர் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் இங்குள்ள பல இளைஞர்கள் பயங்கரவாத, பிரிவினைவாத அமைப்புகளில் சேர்ந்து ஆயுதம் ஏந்தி வருகின்றனர். இதனால் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்ட இளைஞர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தெற்கு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மூன்று இளைஞர்கள் மாற்றத்திற்கான விதையை விதைத்துள்ளனர். புல்வாமாவின் பிங்லெனா பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் 'ஃபால்கான்' என்ற இசைக்குழுவை உருவாக்கியுள்ளனர். இந்த குழுவிற்காக இளைஞர்கள் தங்கள் சொந்த செலவில் அனைத்து உபகரணங்களையும் வாங்கியுள்ளனர்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒலிக்கும் பாட்டு கச்சேரி

இது குறித்து இளைஞர் ஒருவர் கூறுகையில், 'காஷ்மீரில் கலைஞர்களை ஊக்குவிக்க அரசாங்கத்தால் எந்த ஆதரவும் வழங்கப்படவில்லை. பெரும்பாலான கலைஞர்கள் தங்கள் சொந்த பணத்தில் இசைக் கருவிகளை வாங்கி, நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்' என்றார்.

சமூக ஊடகங்களில் இந்த இளைஞர்கள் நிறைய விமர்சனங்களை சந்தித்தாலும், இந்த மாற்றத்திற்கான முயற்சியை முழு மனதுடன், தைரியத்துடன் செயல்படுத்தி வருகின்றனர்.

இது போன்று மாற்றங்களை முன்னெடுக்கும் கலைஞர்களுக்கு அரசு உதவ வேண்டும் என்றும்; அப்படியிருந்தால், மட்டுமே இந்த புல்வாமா பள்ளத்தாக்கின் நிலை மாறும் என்கின்றனர், மாற்றத்திற்காக வித்திட்ட இளைஞர்கள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் முன்பெல்லாம் காஷ்மீரி பாடல் பாடப்பட்டது. இப்போது, அங்கு பாலிவுட், ஹாலிவுட் பாடல் முணுமுணுக்கத் தொடங்கியுள்ளது. பண்டைய காலங்களிலிருந்தே பள்ளத்தாக்கில் இசை நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...கரோனாவிலிருந்து மீண்டவருக்கு மீண்டும் தொற்று: மக்களுக்கு எச்சரிக்கை!

Last Updated : Aug 27, 2020, 10:00 AM IST

ABOUT THE AUTHOR

...view details