கரோனா பெருந்தொற்றினால், தற்போது நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு, வரும் மே 3ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், உள்நாட்டு, வெளிநாட்டு விமானச் சேவை முறையே மே 4, ஜூன் 1ஆம் தேதிகளில் தொடங்கும் என்றும்; அதற்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.
இதனிடையே, மத்திய அரசு முடிவெடுக்கும் வரை விமானச் சேவைகளைத் தொடர வேண்டாம் என விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அண்மையில் அறிவுறுத்தினார்.