மும்பையில் நடைபெற்ற ஐஐடி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் விமானப்படை தளபதி தனேவா கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியில் பேசிய தனேவா, ‘அன்று பாகிஸ்தான் நாட்டிற்குச் சென்ற அபிநந்தன் மிக்-21 விமானத்திற்கு பதிலாக ரஃபேல் விமானத்தில் பறந்திருந்தால் போரின் முடிவு கண்டிப்பாக மாறியிருக்கும்.
ரஃபேல் விமானத்தில் பறக்கவேண்டிய அபிநந்தன், மிக்-21 சென்றதற்கு முக்கிய காரணம் பாதுகாப்புக்கான ஆயுதக் கொள்முதலை அரசியலாக்கியதுதான். நமது அரசாங்கம் ஒரு ரஃபேல் விமானத்தை வாங்குவதற்கு 10 வருடங்கள் எடுத்துக்கொண்டது. இப்படியே சென்றால் இந்தியாவின் மொத்த அமைப்பும் பின்னோக்கிச் சென்றுவிடும். மற்ற கோப்புகளும் மெதுவான வேகத்தில் நகரத் தொடங்குகின்றன.