டெல்லியில் மீண்டும் பெற்ற அசுர வெற்றியையடுத்து ஆம் ஆத்மி தனது கிளையை பக்கத்து மாநிலமான உத்தரப் பிரதேசத்திலும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. அதன் தொடக்கமாக வருகிற 23ஆம் தேதி மிகப்பெரிய வாக்காளர் சேர்க்கை முகாமை நடத்துகிறது.
இதுபற்றி உத்தரப் பிரதேச பொறுப்பாளரான எம்.பி. சஞ்சய் சிங், “அரவிந்த் கெஜ்ரிவாலின் அபிவிருத்தி வளர்ச்சித் திட்டத்தை முன்னிறுத்தி வாக்குகள் பெறுவோம். எனினும் 2022ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவோமா? என்று தெரியவில்லை.
இதுபற்றி இன்னமும் முடிவுசெய்யவில்லை. இது குறித்து கட்சித் தலைமை முடிவெடுக்கும். மேலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னமும் நேரம் இருக்கிறது. தற்போது உத்தரப் பிரதேசத்தில் கட்சியை பலப்படுத்தும்விதமாக ஐந்தாயிரம் பதாகைகள் வைக்கப்படும்” என்றார்.