தமிழ்நாடு

tamil nadu

குஜராத் பேருந்து விபத்து; பிரதமர் மோடி உருக்கம்!

By

Published : Oct 1, 2019, 6:20 AM IST

காந்தி நகர்: பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 21 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தனக்கு வருத்தமளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

A private bus fell in vally near Ambaji - Gujarat 21 feared killed

குஜராத் மாநிலம் பனாஸ்கந்தா மாவட்டத்தில் சுமார் ஐம்பது பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த தனியார்பேருந்து நிலை தடுமாறி அருகிலுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த நான்கு குழந்தைகள், மூன்று பெண்கள் உட்பட 21 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்த காவல் துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மேலும், இந்த விபத்து தனக்கு மிகுந்த மனவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details