தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 26, 2020, 10:44 PM IST

ETV Bharat / bharat

காந்தி குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராவது சாத்தியமா?

காந்தி குடும்பம் அல்லாத ஒருவர் காங்கிரஸ் தலைவராக வேண்டும் என்பது சொல்வதற்கு நன்றாக இருந்தாலும் செயல்பாட்டுக்கு உகந்ததாக இல்லை என மூத்த செய்தியாளர் அமித் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார்.

Congress
Congress

காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவரை தலைவராக தேர்ந்தெடுக்கும் சாத்தியம் உள்ளளவர்கள் என்ற பட்டியலில் பல்வேறு காங்கிரஸ் மூத்த தலைவர்களான அசோக் கெலாட், மல்லிகார்ஜுனா கார்கே, குலாம் நபி ஆசாத், முகுல்வாஸ்னிக் மற்றும் சுசில்குமார் ஷிண்டே ஆகியோரின் பெயர்கள் வலம் வந்தன. ஆனால், பட்டியலில் உள்ள இவர்கள் தேர்வு செய்யப்படுவதற்கான சாத்தியம் என்பது தொலைதூரத்தில் உள்ளது.

இத்தகைய பரிசோதனை முயற்சியை முதலில் மேற்கொள்வது கடினம் என்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. ஒருவேளை அப்படி நடக்கும் பட்சத்தில், எவ்வளவு செயல்திறன் கொண்டதாக இருக்கும் என்பது மிகப்பெரிய கேள்வி.

காந்தி குடும்பத்தை சாராத ஒருவர் தலைவராக தேர்ந்தெடுப்பது என்பது ஒரு புதிய யோசனை அல்ல. முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் மற்றும் அவருக்கு அடுத்து வந்த சீத்தாரம் கேசரி ஆகியோர் சோனியா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முந்தைய காலகட்டமான 1998-க்கு முன்பு பதவியில் இருந்திருக்கின்றனர்.

கடந்த ஆண்டு 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகிய சிலவாரங்களில் கெலாட், ஷிண்டே, வாஸ்னிக் மற்றும் கார்கே ஆகியோரது பெயர்கள் தலைவர் பதவிக்கு அடிப்பட்டன. அப்போது கட்சியின் உள்வட்டாரத்தில், இந்த மூத்த தலைவர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. எதுவாக இருந்தாலும் ராகுல் தமது ராஜினாமா முடிவை திரும்ப ப்பெறும் வரை ஒரு இடைக்கால ஏற்பாடாகத்தான் அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் இந்த மூத்த தலைவர்கள் ஒவ்வொருவரும் கட்சியின் அமைப்புகளில் முக்கியமான இடத்தில்தான் இருக்கின்றனர். தலைவர்கள், தொண்டர்கள் இருதரப்பினரும் ஒரே மாதிரியாகத்தான் கருதப்படுகின்றனர். மேற்குறிப்பிட்ட மூத்த தலைவர்கள் முழு நேரமாக அல்லது பகுதி நேரமாக கட்சி தலைவராக இருக்கும்பட்சத்தில், அது விவேகமானதாக இருக்குமா என்று கட்சியின் நிர்வாகிகள் பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டி பிரிவுகளில் இருந்து பின்னூட்டங்களைப் பெற முயற்சித்தனர். ஆனால் அந்தப் பெயர்கள் குறித்து இந்தியா முழுவதற்குமான கருத்தொற்றுமை ஏற்படவில்லை. அதிருப்தி, திருப்தி என்ற கலந்து கட்டிய முடிவாகத்தான் அது இருந்தது. காந்தி குடும்பம் சாராத ஒருவர் தலைவராக வரவேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தி வரும் நிலையில் கட்சி நிர்வாகிகளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

இந்த விருப்பம் , ஒரு வாய்ப்பாக அல்லது அதன் அமைப்பு காரணமாக சோனியா காந்தியிடமே வந்ததை அடுத்து, மீண்டும் இடைகாலத்துக்கு தலைவராக இருப்பதற்கு அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். முழு நேர கட்சித் தலைவர் ஒரு ஆண்டுக்குள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தலைவர் பதவியை மீண்டும் ஏற்றிருக்கிறார்.

அடுத்த 12 மாதங்களில் ஒரு முழு நேர தலைவரைக் கொண்டு வருவதற்கு கட்சி தயாராக இருக்கிறதா என்பதில் ஒரு தெளிவு இல்லை. ராகுல் காந்தி திரும்ப தலைவராக வரவேண்டும் என்ற மறுபிரவேசத்தைச் சுற்றி ஒரு சலசலப்பு இருந்தாலும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் ஒரு கட்டமைப்பு உருவாகத் தொடங்கி இருக்கிறது.

எனினும், ராகுல் காந்தி தமது தாயிடம் இருந்து தலைவர் பதவியை மீண்டும் பெறுவதற்கு மனம் இல்லாத நிலையில்தான் இருக்கிறார். இதற்கிடையே கட்சிக்குள் ஒலிக்கும் சில சோனியா ஆதரவுக்குரல்கள், தொடர்ந்து சோனியா காந்தியே இடைக்காலத் தலைவராக தொடரும் சூழல் மிக அருகில் இருப்பதாக கூறுகின்றன.

கடந்த ஒரு ஆண்டில், மத்திய பிரதேசத்தில் மார்ச் 2020-ல் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசை பா.ஜ.க கவிழ்த்ததையும் இளம் தலைவர் ஜோதிர்ஆதித்தியா சிந்தியா உள்ளிட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களை கைப்பற்றிய அரசியல் விளையாட்டின் பா.ஜ.க-வின் முதல் வெற்றிக்கு எதிராக செக் வைக்கும் வகையில் எந்த ஒரு முயற்சியோ அல்லது சிறிய நகர்வோ மேற்கொள்ளாமல் கையறு நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இருந்தனர்.

ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்தைப் போன்ற ஒரு ஆபரேஷனுக்கு மீண்டும் ஒரு சாத்தியம் இருப்பதாக பல்வேறு எச்சரிக்கைகள் வந்தபோதிலும் கட்சி நிர்வாகிகள், அசோக் கெலாட் அரசை கவிழ்க்கும் வரை காத்திருந்தனர். ஜூலை மாதம் காங்கிரஸ் அதைத் தடுத்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் காங்கிரஸ் ஒரு சுறுசுறுப்பு இல்லாத எதிர்கட்சியாக மாறி வருகிறது என்பது வெளிப்பட்டது. ஒரு நிச்சயமற்ற தன்மையால் கட்சி பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த விஷயங்களை உணர்ந்து கட்சி ஒருவேளே கீழ் நோக்கிப் போய்விடுமோ என்ற பீதியில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 23 பேரும், சோனியா காந்திக்கு கடிதம் எழுதி கட்சிக்கு ஒரு முழு நேரத் தலைவர் வேண்டும் என்றும் கட்சியை சரிவிலிருந்து மீ்ட்டெடுக்க கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 24-ம் தேதி நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ஒரு வகையில் எதிர்ப்பாளர்களின் நம்பிக்கையை ஒருபுறம் வைத்து விட்டு, கட்சி தங்கள் முழு கட்டுப்பாட்டில் இருப்பதாக சோனியா, ராகுல் காந்தி இருவரும் தெரிவித்திருக்கின்றனர். கட்சிக்குள் இருக்கும் அதிருப்தியாளர்கள் அதிருப்தியை ஒருங்கிணைக்க போதுமான தைரியத்தைப் பெறும் வரை இந்தப் பிண்ணனியில் காந்தி அல்லாத ஒருவர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற எந்த ஒரு விவாதங்களும் அர்த்தமற்றதாகவே இருக்கும். எனவே இது மீண்டும் சாத்தியமில்லை.

கட்சித் தலைவராக காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் வரவேண்டும் என்ற விவாதங்களுக்குப் பின்னால், இருக்கும் ஒரு நபரான அவர் அல்லது அவள் திறமையை நிரூபிக்க அனுமதிப்பது என்பதானது தர்க்கரீதியாக சரியானதாக இருக்கும் ஆனால், அமல்படுத்துவது என்பது சிக்கலானது.

கடந்த காலங்களில் இது போன்ற வாய்ப்புகள் வந்தபோது நூற்றாண்டு கடந்த கட்சியை முன்னெடுக்க ஒரு தனிநபரின் பெயரை ஏற்றுக் கொள்வதில் இதே மூத்த தலைவர்கள் தோல்வியடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும். இதை வைத்துப் பார்க்கும்போது ஆசாத், கார்க்கே, ஷிண்டே அல்லது சிபல் அல்லது வாசினிக் ஆகியோர் ஒன்றாக இணைந்து பயணிப்பது என்பது எளிதான ஒன்றாக இல்லாமல் போகலாம்.

இதற்கு மாறாக, ராகுல், சோனியா இருவரும் தங்களுடைய பின்னடைவுகளுக்கு மத்தியில், மோடி தலைமையிலான பாஜக-வின் தீவிரத்தன்மையை எதிர்கொள்வதற்கு காங்கிரஸ் கட்சியை ஒத்திசைவுடன் ஒற்றுமையை தக்கவைக்க இயன்ற உதவிகளைச் செய்யலாம்.

காந்தி குடும்பத்தினர் பின்னால் இல்லாமல் காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் தலைவர் என்பது போன்ற ஒருமுறையில் காங்கிரஸ் அமைப்பு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்ற இன்னொரு முக்கியமான விஷயம் திறம்பட வேலை செய்ய முடியாமல் போயிருக்கக்கூடும். சோனியா, ராகுல் இருவரும் தொடர்ந்து தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் தங்கள் செல்வாக்கை செலுத்துவது நடைபெற்று வருகிறது. இதனால் இரண்டு அதிகார மையங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த பொருளில் தவிர இதுவும் முக்கியமான கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். பொதுவாக பிரதமர் மோடி அல்லது எந்த ஒரு மூத்த பாஜக தலைவரும் அரசியல் ரீதியான தாக்குதலை தொடுக்கும்போது முதல் இலக்கு என்பது சோனியா, ராகுல் என்று, காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். காங்கிரஸ் மூத்ததலைவர்களை பாஜக தலைவர்கள் தாக்குவதில்லை.

எனினும், இது காந்திகளுக்கு கட்சியை வாழ்நாள் முழுவதுக்குமாக எழுதிக்கொடுத்ததாக ஆகாது. கட்சி செயல்படும் விதத்தில் தீவிர மாற்றங்களை நிர்வாகிப்பதற்கான ஒரு பெரிய பொறுப்பை அவர்கள் கொண்டிருக்கின்றனர். கச்சிதமாக எதிர்த்துப் போர்புரியும் வகையில் நூற்றாண்டு கடந்த கட்சி தேவைப்படக் கூடிய வலிமிகுந்த அறுவை சிகிச்சைகளுக்கும் ஒரு ஊக்கமாக இருக்க வேண்டும்.

முன்கூட்டியே பாதிப்பை கட்டுப்படுத்துவது என்பது நல்லது. தாமதம் என்பது, அதிருப்தியாளர்களை ஒன்று சேர்க்க உதவக்கூடும். இப்போதைக்கு அவர்கள் செயலற்றவர்களாக இருந்தாலும், மீண்டும் ஒருங்கிணைந்து எதிர்காலத்தில் இன்னொரு முறை தலைமைக்கு அவர்கள் நெருக்கடி தரக்கூடும்.

காந்திகள் இருவரும் ஆசாத்திடம் (கருத்து வேறுபாடு கடிதத்தில் கையெழுத்திட்ட 23 பேர்களில் ஒருவர்) போதுமான தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற உறுதி அளிப்பது முதல் நல்ல அறிகுறியாக இருக்கும். ஆனால், அவர்களிடம் இருந்து இதற்கு மேலும் எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details