கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மூன்றாம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரும் வேலையிழந்து அத்தியாவசிய தேவைகளுக்கே அவதியுற்றுவருகின்றனர்.
இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் கான்ஸா கிராமத்தில் வசித்துவரும் இஸ்மியாத் என்பவரது குடும்பத்தினரை இந்து இளைஞர் ரிஷி என்பவர் தத்தெடுத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய இஸ்மியாத், “எங்கள் குடும்பத்தில் இரண்டு மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவினால் ஒருவேளை உணவிற்கே நாங்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானோம். எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளிவாசல் முன்பு பிச்சை எடுத்தாவது குடும்பத்தினரைக் காப்பாற்றலாம் என எண்ணியிருந்தேன். ஆனால், ஊரடங்கு உத்தரவின் காரணமாக பள்ளிவாசலுக்கு மக்கள் வரவும் தடை விதிக்கப்பட்டது” என்று தெரிவித்தார்.