தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 4, 2019, 12:24 PM IST

Updated : Nov 4, 2019, 12:55 PM IST

ETV Bharat / bharat

9ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த மூவர் கைது

திருவனந்தபுரம்: ஒன்பதாம் வகுப்பு மாணவியை கடத்தி நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த சம்பவத்தில் ஒருவர் பிடிபட்ட நிலையில், தலைமறைவாக இருந்த மற்ற மூவரும் காவல் துறையினரிடம் சிக்கியுள்ளனர்.

கற்பழிப்புக் குற்றவாளிகள்

கேரளாவில், ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவியைக் கடத்தி நான்கு பேர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். இந்த வழக்கில் புதுக்குறிச்சி கடினாம்குளத்தைச் சேர்ந்த 20 வயதுடைய நிரஞ்சன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் தலைமறைவாக இருந்த சோஜன் (24), அபிலாஷ் (25), டோமி (23) ஆகிய மூவரையும் காவல்துறையினர் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரின் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த மாணவியைக் காணவில்லை என அக்டோபர் 30ஆம் தேதி மாலையே விடுதி கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது குறித்த விசாரணையில், விடுதிக்குச் செல்ல மாணவி தன் நண்பரின் இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார்.

இதனிடையில் வழியில் மாணவியின் நண்பர், இன்னொருவரையும் இருசக்கர வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதற்கு அந்த மாணவி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனினும் மாணவியை வற்புறுத்தி, விடுதியில் இறக்கி விடுவதற்குப் பதில், வர்கலா எனும் இடத்திலுள்ள ஆளில்லா வீட்டிற்குக் கூட்டிச் சென்றுள்ளனர்.

பள்ளி மாணவியை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த கொடூரர்கள்!

அங்கு ஏற்கனவே இருவர் இருந்துள்ளனர். அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து மாணவியைக் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர். மூன்று நாள் கழித்து இன்று காலை கழக்கூட்டம் எனும் பகுதியில் காலை 5 மணிக்கு மாணவியை இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். அப்போது தான் மாணவியை காவல் துறையினர் அடையாளம் கண்டு மீட்டுள்ளனர்.

Last Updated : Nov 4, 2019, 12:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details